ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எஸ்.பி பட்டினத்தில் ஹாஜா அலாவுதீன்(61) என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு ஹாஜா அலாவுதீன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் திருவாடானை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஹாஜா அலாவுதீனை கைது செய்தனர்.