தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒடசல் பட்டி கூட்ரோடு பகுதியில் கந்தம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இளம் வயதிலேயே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கந்தம்மாள் நடக்க முடியாமல் இருந்துள்ளார். நேற்று காலை கந்தம்பாளையம் வீட்டிற்கு அவரது உறவினர் சிவனேஸ்வரன் சென்றுள்ளார். அப்போது கந்தம்மாள் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட போது மூதாட்டியின் கழுத்தை நெரித்து அவரை கொலை செய்து அவர் காதில் அணிந்திருந்த அரை பவுன் தங்க தோடை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. அவரது உடலை மீட்டு போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மூதாட்டியை கொலை செய்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.