ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிக்கரசம்பாளையம் அரசன் மேடு பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுப்பம்மாள் என்ற மனைவி உள்ளார். வயது முதிர்வு காரணமாக சுப்பையாவுக்கு கண் பார்வை மங்கி போனது. நேற்று முன்தினம் சுப்பம்மாள் பூப்பறிக்கும் வேலைக்காக சென்று விட்டார். இதனால் வீட்டில் தனியாக இருந்த சுப்பையா பீடி புகைப்பதற்காக தீக்குச்சியை பற்ற வைத்தார்.

அப்போது சுப்பையா வீசிய தீக்குச்சி அவரது படுக்கையில் விழுந்தது. சிறிது நேரத்தில் படுக்கையில் தீ பற்றி சுப்பையா மீதும் தீ பரவியது. இதனால் வலியில் அலறி துடித்த சுப்பையாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சுப்பையா பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.