கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராணி தோட்டம் பகுதியில் ராஜன்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே நடந்த சென்றுள்ளார். அப்போது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ராஜன் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதனால் படுகாயமடைந்த ராஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராஜன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.