கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பொன்னப்பன் நாடார் காலனியில் 20 வயதுடைய கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் பி.ஏ ஒன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கல்லூரியில் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நடந்தது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்நிலையில் ஒத்திகை நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த மாணவியை மற்ற மாணவிகள் கிண்டல் செய்ததாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி கல்லூரி வளாகத்தில் இருக்கும் முதல் மாடி தடுப்பு சுவர் மீது ஏறி கீழே குதித்தார். இதனால் படுகாயமடைந்த மாணவியை கல்லூரி நிர்வாகத்தினர் மீட்டு நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.