பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சீகூர் கிராமத்தில் 70 வயதுடைய பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கிராம உதவியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் பெரியசாமி தெருவில் விளையாடி கொண்டிருந்த 8 வயது சிறுமியிடம் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் பெரியசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.