பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனை கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ராமாயி என்ற மனைவி உள்ளார். இந்த மூதாட்டி தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாலிபர்கள் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்து மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.