சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாளப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் சூரிய பிரகாசம், பழனிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இடைநிலை ஆசிரியராக வேலை பார்க்கும் விஜயகுமார், நீர்முள்ளிக்குட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக வேலை பார்க்கும் செண்பகவள்ளி ஆகியோர் இந்த ஆண்டு தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற விழாவில் வைத்து மேற்கூறிய ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கனவு ஆசிரியர் விருதை வழங்கி கௌரவித்தார். இந்த விழாவில் வனத்துறை அமைச்சர் மதி வேந்தன், கல்வித்துறை உயர் அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர். விருது பெற்ற மூன்று ஆசிரியர்களுக்கும் பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.