தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளில் கீழ் சுதந்திர தினம் அன்று நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கும், கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும். இதனை மீறி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகரன் தலைமையிலான அதிகாரிகள் பண்ருட்டி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் ஆய்வு நடத்தினர். அப்போது சுதந்திர தினத்தை முன்னிட்டு பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்காத, பணியாற்ற முன் அனுமதி பெறாத 65 நிறுவனங்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டது.