பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அணுக்கூர் கிராம அஞ்சல் கிளை அலுவலகத்தில் நித்யா அஞ்சல் அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நித்யா பொதுமக்கள் பலர் அஞ்சலகத்தில் செலுத்தும் பணத்தை கணக்கில் வரவு வைக்காமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதனால் அஞ்சல் துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் நித்யா முறைகேடு செய்தது உறுதியானது. இதனால் உயர் அதிகாரி நித்யாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து அனுக்கூர் அஞ்சலகத்தில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை அதிகாரிகள் சந்தித்து விவரங்களை சேகரித்து வருகின்றனர்.