விருதுநகர் மாவட்டத்தில் உள்ளே பெரிய பேராலி கிராம நிர்வாக அதிகாரியாக மதன்குமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கருப்பையா என்பவர் உதவியாளராக இருந்துள்ளார். இந்நிலையில் அலுவலகத்திற்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் மதன்குமாரும், கருப்பையாவும் 1000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. அதன் அடிப்படையில் சாத்தூர் ஆர்.டி.ஓ அனிதா விசாரணை நடத்தினார். இதனையடுத்து மதன்குமார் மற்றும் கருப்பையா ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.