தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சூர்யா. இவருக்கு சூரறைப் போற்று என்ற திரைப்படத்திற்காக கடந்த வருடம் தேசிய விருது கிடைத்தது. அதன்பிறகு சூரறைப் போற்று படத்திற்காக ஃபிலிம் பேர் உள்ளிட்ட விருதுகளும் சூர்யாவுக்கு கிடைத்தது. அதன்பிறகு சூர்யாவின் நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு விருதுகளும் கிடைத்தது. இந்நிலையில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹியூமன் பிராண்ட்ஸ் (IIHB) என்ற அமைப்பு சிறந்த நடிகர் யார் என்று கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. இந்த கருத்துக்கணிப்பு தென் இந்தியாவில் சுமார் 5000 பேரிடம் நடத்தப்பட்ட நிலையில் தென்னிந்தியாவில் நடிகர் சூர்யா தான் நம்பர் ஒன் நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதில் நடிகர் விஜய் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அதன் பிறகு மலையாள சினிமாவில் பகத் பாஸில் மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் முதலிடத்தில் இருக்கிறார்கள். தெலுங்கு சினிமாவில் நடிகர் அல்லு அர்ஜுன் நம்பர் ஒன் நடிகராக இருக்கிறார். மேலும் தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகர் விஜய் தான் என்று சில காலமாகவே சர்ச்சைகள் கிளம்பிய நிலையில் நடிகர் சூர்யா தான் நம்பர் ஒன் நடிகர் என்று தற்போது கருத்துக்கணிப்பின் முடிவில் வெளிவந்துள்ளது சூர்யா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.