பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தின் போது என்எல்சி விவகாரம் குறித்து பேச மாவட்ட ஆட்சியர் தடை விதித்தது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தின் போது என்எல்சி விவகாரம் குறித்து பேச மாவட்ட ஆட்சியர் தடை விதித்தது கண்டிக்கத்தக்கது.

இந்த விவகாரத்தைப் பற்றி பேச உரிமை இல்லை என்றால் எதற்காக குறை தீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும். என்எல்சி விவசாயிகளின் நிலங்களை பறிக்கவில்லை என்றால், விவசாயிகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றால் அது குறித்து விவாதிக்க கடலூர் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட ஆட்சியரும் அஞ்சுவது ஏன்?. மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் ஏன். கடலூர் மாவட்டம் மக்களுக்கும் மண்ணுக்கும் எதிரானது தான் என்எல்சி நிர்வாகம். அர்த்தமற்ற தடைகளின் மூலம் என்எல்எஸிஎதிரான உணர்வுகளை தடுக்க முடியாது. மேலும் இந்த விஷயத்தில் அனைத்து அடக்குமுறைகளையும் என்றும் மக்களின் சக்தி வெற்றி பெறுவது உறுதி என்று பதிவிட்டுள்ளார்.