பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஹர்னாய் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு நேற்று காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது பயங்கரவாதிகள் நிலக்கரி சுரங்கத்தை சுற்றி வளைத்துள்ளனர். அதன் பின் அவர்கள் தொழிலாளர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

இதனை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இது குறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.