புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இறையூர் வேங்கைவயலில் பட்டின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதகழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கடந்த ஜனவரி 14 ஆம் தேதி முதல் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் இதுவரையிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. முன்னதாக நான் முதல்வராக இருந்திருந்தால் இந்த விவகாரத்தில் குற்றவாளிகளே உடனே கைது செய்து சிறைச்சாலையில் அடைத்திருப்பேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியாவில் இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் குழு டெல்லியில் இருந்து நாளை வருகை தர உள்ளது.