உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் நகரில், இந்திராபுரத்தில் உள்ள பிரபல அம்ரபாலி வில்லேஜ் சொசைட்டியில் செவ்வாய்க்கிழமை மாலை 7:13 மணியளவில் பயங்கர சம்பவம் அரங்கேறியது. லிப்ட்டுக்காக காத்திருந்த பணிப்பெண் கல்பனா என்பவரை, உரிமையாளருடன் இருந்த செல்ல நாய் ஒன்று திடீரென பாய்ந்து கடித்து குதறியது.
சிசிடிவி காட்சிகளில், ஒரு ஆணும், அவரது தாய் என நம்பப்படும் ஒரு பெண்ணும், செல்ல நாயுடன் லிப்ட்டில் வருவது பதிவாகியுள்ளது. லிப்ட் கதவு திறந்தவுடன், நாய் வெளியே ஓடி, காத்திருந்த கல்பனாவை கடித்து தாக்கியது. கல்பனா வலியால் கதறி அழுத காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
#Ghaziabad
Street dog bit maid in Amrapali Village Society of Indirapuram police station area. Resident of society was going upstairs with street dog in lift.
Dog attacked maid in lift lobby.
Even after this, resident went to his flat in lift with street dog.#dogs #streetdogs pic.twitter.com/HulnvWeB93— Nikita Sareen (@NikitaS_Live) August 19, 2025
தாக்குதலுக்குப் பிறகு, நாய் மீண்டும் லிப்ட்டுக்குள் ஓடியது. ஆனால், நாயின் உரிமையாளரான அந்த ஆண், காயமடைந்த கல்பனாவுக்கு எந்த உதவியும் செய்யாமல் லிப்ட்டில் ஏறி சென்றுவிட்டார். சிசிடிவி காட்சிகளில், லிப்ட்டுக்குள் இருந்த பெண் நாயை அடிக்க முயல்வது, ஆண் நாயின் தலையில் அறைவது ஆகியவை பதிவாகியுள்ளன.
அந்த பெண், நாய் மீண்டும் வெளியே ஓடாமல் இருக்க, அதற்கு முன்னால் நின்று தடுத்தார். இதற்கிடையில், கல்பனா வலியால் நொண்டியபடி, தனது செருப்பையும், செல்போனையும் எடுத்துக்கொண்டு மற்றொரு லிப்ட்டில் ஏறினார். லிப்ட்டுக்குள் அவர் தொடையை அழுத்தி வலியால் புலம்புவது பதிவாகியுள்ளது.
நாயின் பரபரப்பான குரைப்பையும், கல்பனாவின் அழுகையையும் கேட்டு, அக்கம்பக்கத்தினர் விசாரிக்க வந்தனர். இந்த சம்பவம், டெல்லி-என்சிஆர் பகுதியில் தெரு நாய்களை இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்த விவாதத்தின் பின்னணியில் நடந்துள்ளது.
