சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக சிவகுமார் என்பவர் வேலை பார்த்தார். அவர் சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சூப்பிரண்டாக பணி மாறுதல் செய்யப்பட்டார். இதனால் சென்னை தியாகராய நகர் போலீஸ் துணை கமிஷனராக வேலை பார்த்த அருண் கபிலன் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நேற்று காலை சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து பொறுப்பேற்றுக் கொண்ட அருண் கபிலனுக்கு அதிகாரிகளும், போலீசாரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு வேலையில் சேர்ந்த இவர் திண்டுக்கல்லில் கூடுதல் போலீஸ் சூப்பராகவும், சென்னை தியாகராய நகர் போலீஸ் துணை கமிஷனராகவும் வேலை பார்த்து வந்துள்ளார்.