கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத கடலோரப் பகுதியான இட்டப்பாடு பகுதிக்கு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் சென்றார். அந்த பெண் தனது ஆண் நண்பர்களுடன் தனிமையில் இருந்துள்ளார். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் இளம்பெண்ணையும் அவரது நண்பர்களையும் சுற்றிவளைத்து பிடித்தனர். அப்போது கஞ்சா போதையில் இருந்த அந்த வாலிபர்கள் ஊர் மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த இளம் பெண்ணும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதனை சுற்றி இருந்தவர்கள் வீடியோ எடுத்தனர். இதனை பார்த்த இளம்பெண் வீடியோ எடுப்பவர்களை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் இளம் தலைமுறையினர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வாழ்க்கையை இழந்து பரிதவிக்கின்றனர் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.