தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில் இவர் திருமண நிகழ்ச்சியில் ஒன்றில் அவர் உடுத்தி வந்த ஆடை ரசிகர்களின் கேள்வி கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் நடித்த ரங்குதே என்ற தெலுங்கு திரைப்படத்தை இயக்கிய அட்லூரி சில நாட்களுக்கு முன்பாக பூஜா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் அந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் அணிந்து வந்த கவர்ச்சி உடை பல சர்ச்சைகளுக்கு உள்ளாகியது. அந்த ஆடையில் பல வண்ணங்களில் இருந்தது. இதை பார்த்து ரசிகர்கள் பந்தலுக்கு போடும் சாமியானவை கிழித்து ஆடையாக தைத்து உடுத்திருப்பதாக கேலி செய்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்தார்கள். மேலும் சிலரோ சாமியான பேபி எனவும் கலாய்த்து வருகின்றனர்.