கிரீஸ் நாட்டில் ஏதென்சி நகரில் இருந்து 350 பயணிகளுடன் ரயில் ஒன்று திஸ்லனொய்கி நகருக்கு புறப்பட்டது. இந்த ரயில் லரிசா நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது அதே தண்டவாளத்தில் எதிர்த்திசையில் வேகமாக வந்த சரக்கு ரயிலுடன் மோதியுள்ளது. இந்த விபத்தில் பயணிகள் ரயிலில் உள்ள சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீப்பற்றி எறிய தொடங்கியுள்ளது.

இந்த கோர விபத்தில் 26 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 85 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த அந்நாட்டின் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.