தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் உள்ள மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். அவர்களுடைய வசதிக்கேற்ப போக்குவரத்துத்துறை சார்பாக பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை நாளை 17ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதற்கிடையில் விடுமுறைக்காக நெல்லை வந்தவர்கள் பணியிடங்களுக்கு திரும்புவதற்கு வசதியாக நாளை(ஜன,.17) பிற்பகலில் இருந்து சென்னை, திருப்பூர், கோவை உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.