நீட் நுழைவு தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புது டெல்லி, இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத முன் எப்போதும் இல்லாத வகையில் 20.87 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். மராட்டியம் 2.80 லட்சம், உத்திரபிரதேசம் 2,70 லட்சம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருக்கின்றனர். வருகிற மே 7-ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.