காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து நாடாளுமன்ற மக்களவை தகுதி நீக்கம் செய்து அறிவித்தது. ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்தாலும் மேல்முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் கால அவகாசம் கொடுத்திருந்தது.

இந்நிலையில் ராகுல் காந்தி தனக்கு விதித்த சிறை தண்டனை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு குறித்த விசாரணை இன்று சூரத் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.