ஸ்ரீபெரும்புதூர்- வாலாஜாபாத் இடையேயான 6 வழி தேசிய நெடுஞ்சாலை பணிகளை உடனே வேகப்படுத்தக் கோரி மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார்.

அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது “ஸ்ரீபெரும்புதூர்- வாலாஜாபாத் இடையேயான 6 வழி தேசிய நெடுஞ்சாலை பணிகளை உடனே வேகப்படுத்த வேண்டும். சாலை பணிகளை விரைந்து முடிக்க தமிழ்நாடு அரசு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கும் என்று கூறியுள்ளார்.