கோவை ஆர்எஸ்புரம் பகுதியிலுள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் சார்பாக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு எதிர்ப்பு மாநாடு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மக்களவை உறுப்பினரான ஆ.ராசா பங்கேற்று பேசியதாவது, காங்கிரஸ் மட்டுமல்லாமல் பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆளும் தமிழகம் உட்பட்ட மாநிலங்களிலும் இந்த 10% இட ஒதுக்கீட்டை புரிந்துக்கொள்வதற்கு மறுப்பவர்களாக இருக்கின்றனர்.

இடஒதுக்கீடு தான் இந்திய அரசியல் ஆகும். ராமர் பொய் என்று ஆட்சியைக் கலைக்க ரத யாத்திரை, சமத்துவத்தை உளவியல் ரீதியாக கட்டமைக்க இட ஒதுக்கீட்டை திருடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பேசினார். இந்நிகழ்வில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப வீரபாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, ஆதித்தமிழர் பேரவை அதியமான் உட்பட பலர் பங்கேற்றனர்.