சென்னை கோயம்பேட்டிலுள்ள பிரபல திரையரங்கில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய “பத்து தல” படத்தை பார்க்க வந்த நரிக்குறவ சமூகத்தை சேர்ந்தவர்களை அனுமதிக்கவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து அமைந்தகரை தாசில்தார் திரையரங்கிற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அதோடு நரிக்குறவர் மக்களை படம் பார்க்க அனுமதி மறுத்த திரையரங்கு பணியாளர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் சர்ச்சையில் சிக்கிய திரையரங்கில், நரிக்குறவ மக்களுக்காக “முந்திரி காடு” திரைப்படமானது சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. முந்திரி காடு படத்தில் நடித்த நடிகர் சோமுவின் ஏற்பாட்டின் பேரில் இந்த சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதை ஏராளமான நரிக்குறவ மக்கள் பார்த்து ரசித்தனர்.