மணிரத்னம் டைரக்டு செய்த “பொன்னியின் செல்வன்” திரைப்படம் 2 பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 500-க்கும் அதிகமான திரையரங்குகளில் 5 மொழிகளில் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பலர் நடித்து இருந்தனர்.

பொன்னியின் செல்வன் 2ஆம் பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2-ஆம் பாகத்தோடு சேர்த்து முதல் பாகத்தையும் மீண்டும் ரிலீஸ் செய்ய பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதன் வாயிலாக பொன்னியின் செல்வன் முழு கதையையும் ஒரே நேரத்தில் பார்த்த திருப்தி ஏற்படும் என்று சொல்கின்றனர். இதுகுறித்து நடிகர் பார்த்திபனும் தன் விருப்பத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.