பாலிவுட் நடிகரான சதீஷ் கவுசிக் சென்ற 9 ஆம் தேதி டெல்லியில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இதையடுத்து அவரது உடல் மும்பை கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்குகள் நடந்தது. இதனிடையே அவர் உயிரிழந்து சில நாட்களே ஆகியிருக்கும் நிலையில், அவர் கொலை செய்யப்பட்டதாக டெல்லியை சேர்ந்த ஒரு பெண் தெரிவித்துள்ளார். டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் விகாஷ் என்பவரின் மனைவி, இதுகுறித்து டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

அதே நேரம் புகார் கொடுத்திருக்கும் பெண்ணையும் அழைத்து விசாரிக்க போலீசார் முடிவுசெய்து இருக்கின்றனர். மேலும் சதீஷ் பண்ணை வீட்டில் இருந்து சில போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்திருக்கின்றனர். இதனிடையில் சதீஷ் தங்கிய பண்ணை இல்ல உரிமையாளருக்கு தாவூத் இப்ராகிம் உள்ளிட்ட நிழலுலக தாதாக்களுடன் தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.