அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறந்த குறும்பட பிரிவில் இந்திய ஆவண படமான The Elephant Whisperers என்ற படம் ஆஸ்கார் விருதினை வென்றது. அதன் பிறகு சிறந்த பாடல்களுக்கான பிரிவில் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதினை வென்றுள்ளது. இந்த விருதினை இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் நாட்டு நாட்டு பாடலை எழுதிய சந்திரபோஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அதன் பிறகு சிறந்த குறும்பட பிரிவில் விருது பெற்ற இந்திய ஆவணப்படமான The Elephant Whisperers படத்திற்கான ஆஸ்கார் விருதினை இயக்குனர் கார்த்திகி தயாரிப்பாளர் குனீத் மோங்கோ ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்நிலையில் ஆஸ்கார் விருதினை வென்ற கார்த்திகி, இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் இயக்குனர் ராஜமவுலி ஆகியோருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் ஆஸ்கார் விருதினை வென்ற பெருமைக்குரிய இந்தியர்களை வணங்குகிறேன் என்று ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.