மீசைய முறுக்கு திரைப்படத்தின் வாயிலாக தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை ஆத்மிகா. இதையடுத்து இவர் கோடியில் ஒருவன், காட்டேரி ஆகிய படங்களில் நடித்து உள்ளார். இவர் நடித்த நரகாசூரன் திரைப்படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. மேலும் உதயநிதி உடன் இவர் நடித்திருக்கும் “கண்ணை நம்பாதே” படம் மார்ச் 17ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை டைரக்டர் மு.மாறன் இயக்கி இருக்கிறார்.

இந்த நிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் ஆத்மிகா தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, காதல் தோல்வியினால் சில முறை இரவெல்லாம் அழுதிருக்கிறேன். நான் பிரேக் அப் செய்யவில்லை. என்னை காதலித்தவர் தான் பிரேக் அப் செய்தார். எனினும் அதற்காக தற்போது நான் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு சாதரணமான நல்ல மனிதராக இருந்தால் மட்டும் போதும். பணமா, புகழா எது முக்கியமென்றால் பணம் தான் முக்கியம் என்று சொல்வேன். ஏனென்றால் அதுதான் எதார்த்தம்” என்று ஆத்மிகா கூறினார்.