நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் அண்மையில் ரிலீஸ் ஆன “கொன்றால் பாவம்” படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் குறித்த நேர்காணலின்போது வரலட்சுமியிடம் உடல் எடை குறைத்துள்ளது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு வரலட்சுமி கூறியதாவது “உடல் என்பது என்னுடைய உரிமையாகும். நடிகை என்பதால் இப்படித்தான் இருக்க வேண்டுமென அவசியமில்லை. உடல் எடை அதிகமாகிக்கொண்டே போனதால், சில உடல்நல பிரச்னைகளை நான் எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

தற்போது நான் ஹைதராபாத்தில் தான் தங்கி இருக்கிறேன். படப்பிடிப்பு, வேறு ஏதும் முக்கிய விஷயங்கள் என்றால் மட்டும்தான் சென்னை வந்து போகிறேன். அப்படி இருக்கும் போது தெலுங்கு சினிமாக்களுக்கு என சில விஷயங்கள் தேவைப்படுகிறது. இதனால் அதற்காகவும் உடல் எடையைக் குறைத்தேன். ஆகவே யார் என்ன சொன்னாலும் அதை காதில் வாங்கிக்கொள்ளாதீர்கள். உங்களுக்காக நீங்கள் செய்யவேண்டும் என்று விரும்புவதை செய்யுங்கள்” என பதிலளித்தார்.