நடிகர் அஜித்தின் 62-வது படத்தில் இருந்து டைரக்டர் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு, மகிழ் திருமேனி இயக்குவதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து விக்னேஷ் சிவனின் அடுத்த திரைப்படம் தொடர்பான பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் தன் சமூகவலைதளப்பக்கத்தில் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கூறியதாவது “என் குழந்தைகளுடன் அனைத்து தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி.

வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்துவித வலிகளுக்கும் ஒரு நன்மை உள்ளது. பாராட்டு மற்றும் வெற்றி நமக்கு கற்பிப்பதை விட, அவமானமும் தோல்வியின் அனுபவமும் நிறைய கற்றுக்கொடுக்கிறது. என் “விக்கி 6″ படத்துக்காக இதயத்தில் இருந்து தயாராகிறேன். இந்த கடினமான காலக்கட்டத்தில் என்னுடன் தன்மையாக நடந்துகொண்ட மக்களுக்கும், கடவுளுக்கும் நன்றி. இதனிடையே வருங்காலத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார். அவரின் இப்பதிவு “ஏகே 62” பட வாய்ப்பு பறிபோனதையும், அந்த வருத்தத்திலிருந்து மீண்டு அடுத்த படத்திற்கு தயாராவதையும் காட்டுகிறது.