தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் குஷ்பு. இவர் சில நாட்களுக்கு முன் தன் காலில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அதற்காக தான் சிகிச்சை எடுத்து வருவதாகவும் ஒரு புகைப்படம் வெளியிட்டிருந்தார். மேலும் இதற்காக என் பயணத்தை நிறுத்திக்கொள்ள போவதில்லை எனவும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று காலை வெளியூர் போக சென்னை ஏர்போர்ட்டிற்கு குஷ்பு வந்துள்ளார். அந்த வேளையில் தான் உட்கார்ந்து போக சக்கரநாற்காலி கிடைக்காமல் சிரமப்பட்டதாக குஷ்பு பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவை ஏர் இந்தியா நிறுவனத்தின் பெயருக்கு டேக் செய்து, முழங்காலில் காயம் ஏற்பட்ட பயணிகளை அழைத்துச் செல்ல தேவைப்படும் சக்கரநாற்காலி கூடவா உங்களிடத்தில் இல்லை. அதன்பின் வேறொரு விமான நிலையத்திலிருந்து சக்கர நாற்காலி வாங்கி வந்து என்னை அழைத்து சென்றனர் என குஷ்பு பதிவிட்டிருந்தார். இப்பதிவை அடுத்து ஏர் இந்தியா நிறுவனம் அவரிடத்தில் மன்னிப்பு கேட்டுள்ளது. இவ்விவகாரம் உடனடியாக சென்னை விமான நிலைய குழுவுக்கு எடுத்துச்செல்லப்படும் எனவும் குஷ்புவுக்கு பதிலளித்துள்ளது.