தமிழ்நாடு அரசு திட்டங்களின் செயல்பாடுகளானது எந்த அளவிற்கு செயல்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த அடிப்படையில் நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட மூத்த அதிகாரிகள், துறை வாரியான செயலாக்கத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து தொடர்ந்து ஒவ்வொரு முன்னெடுப்பு திட்டங்களின் செயல்பாடுகளையும் முதல்வர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் நடப்பு ஆண்டிற்குள் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.