மதுரையில் இன்று முதல் வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி வரை பொது மற்றும் தனியார் இடங்களில் கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ள நிலையில் அடுத்த 15 நாட்களுக்கு ஆயுதம் ஏந்தி, ஆயுதம் ஏந்தி சீருடையில் ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரையைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் இந்த தடை உத்தரவு விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.