இலங்கை நாட்டின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நான்கு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறி அதனை இலங்கை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் “இலங்கை கடற்பரப்பிற்கு உட்பட்ட பகுதியில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டதற்காக நான்கு படகுகளும் இணைந்து நான்கரை லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக பராமரிப்பு செலுத்த வேண்டும்.

அதோடு இந்த உத்தரவை எதிர்த்து படகின் உரிமையாளர்கள் மேல் முறையீடு செய்யலாம். மேலும் வழக்க முடியும் வரை படகுகள் விடுவிக்கப்படாது” என்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.