அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கருப்பசாமி பாண்டியன் இல்ல திருமண விழா முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் மகத்தான வெற்றி பெறுவார் என்று தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு தண்ணீர் வசதி கூட தி.மு.க அரசு செய்து தரவில்லை. பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலையை இந்த அரசு வழங்காதது வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும். அதிமுக எந்த கட்சியையும் நம்பி இல்லை என்று தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, பல கட்சிகளை அதிமுக தான் தாங்கிப் பிடித்து கொண்டிருப்பதாக பேசியுள்ளார்.