ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் ஈரோட்டில் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “நீட் விலக்கு மசோதா இருமுறை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அதை ஆளுநரும், மத்திய அரசும் தற்போது வரை பொருட்படுத்தவில்லை. நான் சாதாரண ஸ்டாலின் அல்ல, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். நீட் விலக்கு நிறைவேற்றுவதே என் லட்சியம் என பேசினார். அதனை தொடர்ந்து திமுக சாதனைகளை கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் முதல்வர் ஸ்டாலின்.