ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு நாம் தமிழர், தேமுதிக போன்ற கட்சிகளும் போட்டியிடுகிறது. அதன் பிறகு அதிமுகவில் கேஎஸ் தென்னரசு போட்டியிடுகிறார். இன்று மாலை 5 மணியோடு பிரச்சாரம் நிறைவடையும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் அக்ரஹாரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது அம்மா டிவி பார்த்தாங்க. ஜூஸ் குடித்தார்கங்க என்று சொன்னாங்க. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக நாங்கள் சொல்லவில்லை. அவர்கள் தான் சொன்னார்கள். ‌ ஜெயலலிதா மரணம் மற்றும் கொடநாடு கொலை, கொள்ளை போன்ற வழக்குகளில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறதோ அவர்கள் எல்லோரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கூறினார்.