கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திருமணி வட்டம் கிராமத்தில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பார்த்திபன் ஜவ்வாது மலை அடிவாரப் பகுதியில் இருக்கும் விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து 21 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஆடுகளை மேய்த்து கொட்டகையில் அடைத்து விட்டு பார்த்திபன் வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது மர்ம விலங்கு கடித்து குதறியதால் 16 ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் 5 ஆடுகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த கால்நடை துறை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். இது பற்றி அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.