பிரபலமான நாட்டுப்புற பாடகர்களாக வலம் வருபவர்கள் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி. இந்த தம்பதிகளுக்கு இரு மகள்கள் இருக்கிறார்கள். அண்மையில் மூத்த மகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அனிதா குப்புசாமி அண்மையில் ஒரு பேட்டியில் தன்னுடைய ஆண் குழந்தை இறந்தது பற்றி உருக்கமாக பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, எனக்கு முதலில் பல்லவி என்ற பெண் குழந்தை பிறந்தது. பின்னர் நான் இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன்.

என் ஆசையை கடவுள் நிறைவேற்றினார். எனக்கு இரண்டாவதாக அழகிய ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் சிசேரியன் முறையில் பிறந்த என்னுடைய குழந்தை 24 மணி நேரத்தில் இறந்து விட்டது. மருத்துவர்கள் தவறான ஊசி போட்டதால் நெஞ்செல்லாம் எரிஞ்சி என் குழந்தை இறந்து விட்டது என்று கண் கலங்கியபடி கூறியுள்ளார். மேலும் அனிதா குப்புசாமியின் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.