சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியின் 42வது பிறந்தநாளை முன்னிட்டு 52 அடி மற்றும் 77 அடி உயரத்தில் கட் அவுட் வைத்து ரசிகர்கள் கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

2007 டி20 உலகக் கோப்பை, 2011 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி என அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் எம்எஸ் தோனி மட்டுமே. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் தோனியின் கேப்டன் காலத்தை இந்திய அணியின் பொற்காலம் என்று சொல்லலாம். சமீபத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தபோதும், பலரும் தோனியைப் பற்றி பேச ஆரம்பித்தனர்.

41 வயதிலும் சென்னை அணிக்காக 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று தன்னலமற்ற வீரராக வலம் வருகிறார் தோனி. அதேபோல், இப்போது இந்திய அணியில் விளையாடி வரும் விராட் கோலி, ரோகித் சர்மா, அஷ்வின், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா என அனைத்து மூத்த வீரர்களின் வளர்ச்சியிலும் தோனி முக்கிய பங்காற்றியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 4 ஆண்டுகள் ஆன பிறகும், தோனி மீதான கவனம் இன்னும் குறையவில்லை.

அந்த அளவுக்கு தோனியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் கூட சென்னை அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோனிக்கு எதிரணி ரசிகர்கள் மஞ்சள் நிற ஜெர்சி அணிந்து வரவேற்பு அளித்தனர். அந்த அளவிற்கு தோனி மீது ரசிகர்கள் அன்பை பொழிந்து வருகின்றனர். தோனி நாளை தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். காயத்தில் இருந்து குணமடைந்த அவர் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் தோனி கொண்டாடத் தொடங்கும் முன்பே ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினர். ஹைதராபாத்தில் 52 அடி உயரத்தில் தோனிக்கு முழு நீல நிற கட் அவுட் போட்டு கொண்டாட்டத்தை தொடங்கினர். அதேபோல  ஆந்திர மாநிலம் நந்திகாமாவில் 77 அடியில் கட்அவுட் வைத்துள்ளனர். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தோனிக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருப்பது நிரூபணமாகியுள்ளதாக தோனி ரசிகர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

https://twitter.com/DHONIism/status/1676877525547622400