மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று(பிப்,.17) சோதனை நடத்தினர். தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூருக்கும், இவருக்குமான பண பரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடந்ததாக சொல்லப்படுகிறது.

சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். ஏற்கனவே நடிகர் மோகன்லால் வீட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.