
பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மனோஜ் பாண்டியன், தேர்தல் என்று வந்தால் ஒரு சிறப்பு அண்ணன் ஓபிஎஸ்-க்கு உண்டு. காரணம் இந்த மேடையில் ஐந்து முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய பெருமை…. வெற்றி பெற்ற பெருமை அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கு உண்டு, என்று நமக்கு தெரியும்.
தேர்தல் என்று வந்தால் இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள் கூட்டணிக்கு யாரை நியமித்தார் ? பேசுவதற்கு யாரை அனுப்பினார் ? என்று சொன்னால், இங்கே மேடையில் வீற்றிருக்கக்கூடிய நம்முடைய ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓபிஎஸ் தான் என்பதை இந்த நாடறியும். அதேபோன்று தேர்தலில் வியூகம் என்று சொன்னால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் 2019 ஆம் ஆண்டு எல்லோரும் 4 லட்சம், 5 லட்சம் என்று சொல்லி…. அப்பொழுது முதலமைச்சராக இருந்த எடப்பாடி தொகுதியை கூட லட்சக்கணக்கில் தோற்றபோது,
வெற்றி பெற்ற ஒரே தொகுதி தேனி தொகுதி என்று நிரூபித்த பெருமை அண்ணன் ஓபிஎஸ் அவர்களையே சாரும். அதே போன்று நம்முடைய உரிமைக்காக… தொண்டர்களுக்காக….. இன்றைய தினம் இந்த உரிமை மீட்பு குழுவை ஆரம்பித்து, இன்று தொண்டர்களின் உரிமையை மீட்பேன் என்று சொல்லி, உங்கள் உணர்வை புரிந்த ஒரே தலைவர் அண்ணன் ஓபிஎஸ் தான் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் இன்று உங்கள் உணர்வை புரிந்து இருக்கின்றார் என தெரிவித்தார்.