கடந்தாண்டு நடந்த குரூப்-4 தேர்வுக்கான மூன்றாவது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு வருகின்ற மார்ச் எட்டாம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்த தகவல் எஸ்எம்எஸ் மற்றும் ஈமெயில் மூலமாக தெரிவிக்கப்படும். தவறினால் மறு வாய்ப்பு வழங்கப்படாது.