நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… கடந்த மூன்று நாட்களாக எதிரணி நண்பர்கள் டிக்ஷனரியில் வார்த்தைகளை தேடி தேடி, எவ்வளவு கெட்ட சொற்கள் இருக்கின்றனவோ,  அத்தகைய கெட்ட சொற்களை எல்லாம் பயன்படுத்தினார்கள். இருந்தாலும் நல்லது தான்.  மனதில் இருக்கின்ற இந்த கவலைகள் நீங்கிருக்கும். மனதை சற்று எளிமையாக இருக்கும். அவர்களுடைய முக்கியமான குரல் என்ன ?

”மோடி” உங்களுடைய புதைகுழி தோண்டப்படும் என்பதாகும். ”மோடி”   உங்களுடைய புதைகுழி தோண்டப்படும். இதுதான் இவர்களுடைய பிடித்தமான ஒரு முழக்கம். ஆனால் என்னை பொருத்தவரையில்…  இவர்களுடைய இந்த திட்டத்தில்…  இந்த கெட்ட வார்த்தைகள் இதெல்லாம் எனக்கு டானிக் போல் ஆகிவிடுகிறது. இவர்கள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள் ? ஏன் இவ்வாறு நடக்கிறது ? அதற்கான ரகசியத்தை நான் இன்று அவையிலே சொல்ல விரும்புகின்றேன்.

எனக்கு பூரண நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. எதிரணியில் இருப்பவர்களுக்கு ஒரு ரகசியமான ஒரு வரம் கிடைத்து இருக்க வேண்டும். ரகசியமான வரம். அந்த வரம் என்னவென்றால் ? இவர்கள் யாரைப் பற்றியே கெடுதல் நினைக்கிறார்களோ,  அவர்களுக்கு நன்மைதான் நடக்கும் என்ற வரமாக இருக்க வேண்டும். ஒரு உதாரணம் இங்கே நான் இருக்கிறேன்.  என்னை பாருங்கள்…. 20 ஆண்டுகளாக எனக்கு என்ன அவர்கள் செய்யவில்லை, என்னென்னவோ எல்லாம் செய்தார்கள். ஆனால் எல்லாமே எனக்கு நன்மையிலே முடிந்து இருக்கின்றது.