திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள வன சுற்றுலா தலங்களான மேயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், தூண் பாறை, குணா குகை உள்ளிட்டவை பராமரிப்பு பணிகள் காரணமாக மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. இந்த பணிகள்  கடந்த புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்  ஓட்டுநர் உரிமம், ஆர்.சி, காப்பீட்டு சான்றிதழ் ஆகியவை இருந்தால் மட்டுமே வனப்பகுதிக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படும் எனவும், பேரிஜம் பகுதிக்கு செல்ல ஒரு நாளைக்கு 50 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.