ஈரோடு மாவட்டம், பவானி, கூடுதுறை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கோகிலவாணி என்ற 25 வயது பெண் செவ்வாய்க்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில், கோகிலவாணியின் கணவர் கடந்த ஆண்டு விபத்தில் இறந்துவிட்டதாகவும், அவர் தனிமையில் அவதிப்பட்டு வந்ததும் தெரியவந்தது. இவர் தனது 3 வயது மகளுடன் விடுதியில் தங்கி இருந்தார்.

விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோகிலவாணிக்கும் அவரது  தாய் யசோதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், கோகிலவாணி கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி தனது மகளுடன் ஈரோடு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

இந்நிலையில், கணவனை இழந்த அவர் தாயுடனும் சண்டை ஏற்பட தனக்கு யாருமில்லாதது போல் நினைத்து தனிமையின் கொடுமையை தாங்கி கொள்ள முடியாமல், முதலில் குழந்தையை கொன்றுவிட்டு, பின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து பவானி போலீஸார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.