ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை பகுதியில் தனியார் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த விடுதியில் கடந்த 13-ஆம் தேதி கோகிலவாணி (25) என்ற 3 வயது பெண் தன்னுடைய பெண் குழந்தையுடன் அறையெடுத்து தங்கியுள்ளார். இவர் தங்கி இருந்த அறையில் இருந்து கடந்த 15-ஆம் தேதி துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் விடுதி ஊழியர்கள் பவானி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பூட்டிய அறையை உடைத்து பார்த்தனர்.

அப்போது பெண் குழந்தை கீழே படுக்கையில் சடலமாக கிடந்த நிலையில் கோகிலவாணி தூக்கில் பிணமாக தொங்கினார். இவர்களின் சடலங்களை காவல்துறையினர் மீட்டு பிரேத  பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இறந்த பெண் திருச்செங்கோட்டையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இவருக்கு 4 வருடங்களுக்கு முன்பாக சசிதரன் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் கடந்த வருடம் அவர் ஒரு விபத்தில் உயிரிழந்தார்.

இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த கோகிலவாணி தன்னுடைய தாயார் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். இந்நிலையில் கோகிலவாணிக்கும அவருடைய தாயாருக்கும் இடையே தகராறு  ஏற்பட்டதால் தன்னுடைய குழந்தையுடன் விடுதி அறையில் தங்கியுள்ளார். அதோடு தனக்கு யாருமில்லை என்பதை நினைத்து மனம் வருந்திய கோகிலவாணி தன்னுடைய குழந்தையை கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் அந்த  பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.