புதுச்சேரியில் இருக்கக்கூடிய பிரசதி பெற்ற  காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 50 கோடி மதிப்பிலான 64 ஆயிரம் சதுர அடி நிலத்தை போலி பத்திரம் தயாரித்து தனியார் நிறுவனத்திடம் விற்றுள்ளதாகவும், நில அபகரிப்பில்  பொதுப்பணித்துறை அதிகாரிகள்,  தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கக்கூடிய ஜான் குமார் மற்றும் அவரது மகன் ரிசர்ட் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி, கோவில் நிர்வாகம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது

இது தொடர்பான வழக்கு விசாரணையில் நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியன், காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை பார்த்து கோவில் சொத்து தனியாருக்கு விற்கப்பட்டதில்  அரசு அதிகரிக்கும் தொடர்பு இருப்பதாக தெரிந்து அதிர்ச்சி அடைவதாக தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட இவர்களுக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டதை  நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

மக்கள் பிரதிநிதிகளாக இருக்கக்கூடிய எம்எல்ஏக்கள் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவதை சகித்துக் கொள்ள முடியாது என்றும், ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார். பொது சொத்தாக இருக்கக்கூடிய கோவிலை பாதுகாக்க வேண்டியது எம்எல்ஏக்களாக இருக்க கூடிய மக்கள் பிரதிநிதிகளின் கடமை என்பதால்,

சம்மந்தப்பட்ட நிலம் கோவில் நிர்வாகம் என நிரூபணமானால் முறைப்படி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். கோவில் சொத்தை அபகரித்ததாக 2 MLA-க்கள் மீதான குற்றசாட்டு நிருபணமானால் CBCID விசாரணையை எதிர்கொள்ள முடியும்  என உத்தரவிட்டு,  வழக்கின் விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளி வைத்திருக்கிறார்.